ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Tuesday, February 4th, 2020

இலங்கை சோசலிச குடியரசின் 72ஆவது சுதந்திர தினம் நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் மிகவும் எளிமையாக முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார். அதற்கமைய வழமையாக நடைபெறும் பல விடயங்கள் இன்றைய நிகழ்விலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: