முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் – அமைச்சர் சம்பிக்க!

Friday, August 23rd, 2019

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை போன்று முஸ்லிம் பெண்களின் முகத்தை மறைத்தல் மற்றும் ஆடை தொடர்பிலான சட்டமும் பொலிஸ் சட்டத்திற்கு கீழ் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையி0ல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மூடியவாறு அணியும்பர்தா   உடையை தடைசெய்யுமாறு கோரிக்கை வலுவாக எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: