அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம் – 4.0 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!
Friday, February 19th, 2021அம்பாறை – பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பொத்துவில் – சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தினை தங்களாலும் உணரக்கூடியதாக இருந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை!
வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்க நடவடிக்கை - ஆளுநர் ஜீவன் தியாகரா...
உள்நாட்டின் உற்பத்தி ஏராளமாக உள்ளது - இறக்குமதி செய்யும் சிமெந்து மூலமே விலை நிர்ணயிக்கப்படுகிறது - ...
|
|