கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினால் 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கலாம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021

கொரோனா ஶ்ரீ தொடர்பான வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடையும் என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன் மூலம் திங்கட்கிழiமை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்ககூடிய சூழல் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 21 ஆம் திகதி போக்குவரத்து தடைகளை நீக்குவது என்றே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் போக்குவரத்து கட்டுப்பாடுகள் உட்பட விதிமுறைகளை மக்கள் இறுக்கமாக பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிகளவு வாகனங்களை வீதிகளில் அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உரிய ஆவணங்கள் காரணங்கள் இன்றி பயணிக்கும் வாகன சாரதிகளை கைதுசெய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமைக்காக நேற்று செவ்வாய்கிழமை ஆயிரத்து 411 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுது.

Related posts: