முப்படையினரையும் பாதுகாக்க ஜனாதிபதி பணிக்குழுவின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது – ஜனாதிபதியின் செயலாளர்!

Wednesday, July 22nd, 2020

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முப்படையினரையும் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சமூகத்தில் தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் உடனடி நடவடிக்கைகளின் அவசியத்தை அடையாளம் கண்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களின் மறுவாழ்வு மையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் பணியாற்றும் அதிகாரிகளும் எதிர்காலத்தில் இந்த பணிக்குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த ஜனாதிபதி பணிக்குழு ஏப்ரல் 27 ஆம் திகதி நிறுவப்பட்டது. விமானப்படை முன்னாள் தளபதி மார்ஷலட ரொஷான் குணதிலக இதன் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: