முன்னைய அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் உதவியது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, April 3rd, 2021

முன்யை அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும் உதவியது என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் தேர்தல்கள் பிற்போடப்படுமா என்ற ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் நிச்சயமாக தேர்தல்களை நடத்துவோம் ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள படி சில சட்டங்களை இயற்றவேண்டியுள்ளது எனவும் அவர் தொவித்துள்ளார்.

மக்கள் முன் செல்வதற்கு முன்னைய அரசாங்கம் அஞ்சியதால் அது பல காரணங்களை முன்வைத்தது என தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ் இவ்வாறான நிகழ்ச்சி திட்டங்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும் உதவியது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: