முன்னாள் போரளிகளை பொலிஸ் சேவையில் இணைக்க நடவடிக்கை!

Wednesday, March 8th, 2017

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 200 பேரை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் சமூக நலப் பிரிவுடன் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் பாதுப்புத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்குக், கிழக்குப் பிரதேசங்களில் மொழிக் கையாள்கையில் நிலவும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசங்களில் புனர்வாழ்வு பெற்ற சுமார் 3,500 இற்கும் அதிகமான முன்னாள் போராளிகளில் சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டு பொலிஸ் துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட விடயங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மொழிக் கையாள்கயைில் நிலவும் பிரச்சினைகளுக்கும் இதன் ஊடாக தீர்வை எட்ட முடியும். பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடப்படவுள்ளது பொலிஸ் சேவையில் ஏற்கனவே சுமார் 1,950 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுளளனர்.

எதிர்காலத்திலும் தேவையின் அடிப்படையில் முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்

Related posts:

ஊர்காவற்றுறை பிரதேச சிறுகைத்தொழில் தொடர்பில் துறைசார் அமைப்புகளுடன் தவிசாளர் ஜெயகாந்தன் ஆலோசனை!
நாடு நாளை வழமைக்கு திரும்பினாலும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இல்லை - தனியார்...
உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது – யாழ் மாவட்ட மகளிர் வி...