முன்னாள் பிரதி அமைச்சர் கருணா கைது!
Tuesday, November 29th, 2016முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக கருணா இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த ஆட்சிக்காலத்தில் பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்களில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்பு!
உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காவிட்டால் இணையத்தில் தரவிறக்கவும்!
வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலை – முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சு அறிவி...
|
|