மீன்பிடி வள்ளங்களுக்கு ஜி பி எஸ் தொழிநுட்பம் – இலங்கை அரசு அதிரடி!

Saturday, February 9th, 2019

மீனவர்களுக்கு அடையாள அட்டையும் அனைத்து மீன்பிடி வள்ளங்களுக்கும் ஜி பி எஸ் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

மீனவர் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தல் சட்டவிரோத கொடுக்கல்வாங்கல் வெளிநாடுகளுக்கு செல்வது ஆகியவற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்தொழில் துறைமுகங்களில் இருந்து செல்லும் கடற்தொழிலாளர்களின் கைவிரல் இயந்திரத்தில் தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்தபின்னர் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அவசர அறிவிப்பு காலநிலை அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கும் குறுந் தகவல்களை பரிமாறுவதற்கும் 2 மாத காலப்பகுதிக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.

Related posts: