மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமானதாக்க நடவடிக்கை – மீன்பிடித்துறை அமைச்சு!

Thursday, January 31st, 2019

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மீன்பிடித்துறை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

இதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துக்கு உள்நாட்டில் 22 கொள்வனவு மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன.

அவற்றில் 8 நிலையங்கள் மாத்திரமே இலாபகரமாக இயங்குகின்றன.

மேலும் அதன் தலைமை அலுவலகத்தில் மாத்திரம் 244 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இவ்வாறு அதீத பணியாளர்களை கொண்டுள்ளமையும், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நட்ட நிலைமைக்கு காரணம் என்று மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:

பிரதமர் மஹிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் ...
இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை – ஊர்காவற...
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைப்...

குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைக்க 2 பில்லியன் நிதி ஒதுக்கீடு - நகர அபிவிருத்தி அதிகார சபை...
கொரோனா பரவலுக்கு மத்தியில் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் – பிரதமர்...
வடக்கு சுகாதாரத்துறை திருப்திகரமாக இல்லை - ஈபிடிபி ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!