இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

Saturday, September 10th, 2022

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு, சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், சார்க் வெளிவிவகார அமைச்சர்களை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன் - சிறித...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல...
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும...