பிரதமர் மஹிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் – இராஜாங்க அமைச்சர திலும் அமுனுகம தெரிவிப்பு!

Friday, December 31st, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அவரை ஓய்வு பெற அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக நாட்டில் தகவல் ஒன்று பரவி வருவது குறித்து செய்தியாளர் ஒருவர், திலும் அமுனுகமவிடம் கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். .

மேலும் மஹிந்த ராஜபக்ஷ ஒரு முறை அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தார். நாட்டு மக்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

மீண்டும் அவர் ஓய்வு பெற முயற்சித்தாலும் அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். இதுதான் உண்மையான கதை.

அந்தவகையில் அவர் விரும்பினாலும் அதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்காது. மகிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை அரசியலிலிருந்து ஓய்வு பெற மக்கள் அனுமதி வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: