இலங்கையின் மீன்பிடித் துறைகளில் வீழ்ச்சி!

Tuesday, May 1st, 2018

கடந்த ஆண்டில் மேலான்மை மற்றும் மீன்பிடித் துறைகளில் 10.9 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின்  ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து நிலவிய தொடர்ச்சியான வறட்சி காரணமாக நெல்லுற்பத்தி 46.1 சதவீத்தினால் வீழ்ச்சியடைந்து, கடந்த தசாப்த காலத்தில் மிகக் குறைந்த நெல்லுற்பத்தியைபதிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொடர்ச்சியான வீழ்ச்சியை எதிர்நோக்கி வந்த தேயிலை உற்பத்தி துறை கடந்த வருடத்தில் 5.2 சதவீத வளர்ச்சியுடன் மீட்சியடைந்துள்ளது. தேயிலை உற்பத்தி துறையில் சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் 75.4 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

2017ஆம் ஆண்டுக்கான கொழும்பு தேயிலை ஏலங்களில் சராசரி விலைகள் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதத்தினால் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதனிடையே 2016 ஆம் ஆண்டில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி ஏற்றுமதி விலை 639 ரூபா 88 சதமாக இருந்த அதேவேளை, 2017ஆம் ஆண்டில் 807 ரூபா 44 சதமாக அதிகரித்து 26.2 சதவீதவளச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Related posts: