மீண்டும் வாள்வெட்டு நெல்லியடியில் பதற்றம்!

Monday, September 11th, 2017

நெல்லியடி நேற்று அதிகாலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என்று நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.

நெல்லியடி கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர். கொடிகாமத்திலிருந்து இந்த வீதியூடாக பயணம் செய்த நால்வரை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை வெட்டுவதற்கு வாள்களை ஓங்கி தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் இரண்டையும் கைவிட்டு நால்வரும் தப்பியோடியுள்ளனர்.இந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளை கொத்தி சேதப்படுத்தியதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாள்வெட்டுக் குழுவினர் தலை மறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிது நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் அந்தப் பகுதிக்கு வந்து கொத்தப்பட்ட நிலையிலிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்றுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts: