மீண்டும் பொலிஸ் ஊடகப் பிரிவு ஆரம்பம்!

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இயங்காமல் இருந்த பொலிஸ் ஊடகப் பிரிவு புத்தாண்டுடன் தனது பணிகளை மீள ஆரம்பித்துள்ளது.
அரசின் உயர் மட்டத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன விடுத்த விசேட பேரில் பொலிஸ் ஊடகப் பிரிவு தனது பணிகளை மீள ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி வழங்கப்பட்ட இடமாற்றங்களில் பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் கீழேயே இன்று முதல் அந்த பிரிவு இயங்க ஆரம்பித்துள்ளது.
Related posts:
இலங்கையில் காணாமல்போன சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஐ.நாவில் குழப்பம்!
இன்று மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பு!
மட்டக்களப்பில் 79 ஆயிரத்து 580 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு- மாவட்ட அரசாங்க ...
|
|