வாசனைத் திரவியங்களை பாவனைசெய்யும் இலங்கையருக்கு ஆபத்தா? எச்சரிக்கை விடுக்கும் நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் !

Friday, April 19th, 2019

வாசனை திரவியங்கள் பயன்படுத்துபவர்கள் அதன் தரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துமாறு இலங்கை நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.   

பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்காரங்கள் இலங்கை சந்தையில் இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

புத்தாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையத்தின் பணிப்பாளர் பவுஸர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த இந்த சுற்றிவளைப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts:


விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத...
சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் பொய்யானவை - தரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் வெளியிடப்படாது...
ஈஸ்டரை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடக் கூடியவாறு நமது அரசாங்கமே செய்துள்ளது - ஈஸ்டர் செய்தியில் அரச...