மீண்டும் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் !
Tuesday, November 27th, 2018பெரும் சர்ச்சைக்குரிய நிலைமைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது
இன்றைய தினமும் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் மற்றும் விசேட விருத்தினருக்கான பார்வையாளர் கூடம் என்பன குறிப்பிட்ட தரப்பினருக்காக அனுமதிக்கப்படாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற கலரிக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
புகையிரத சேவைகள் நாளை வழமைபோல் நடைபெறும்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி மக்கள் நலனை நிறைவேற்றியது ஈ.பி.டி.பி. - வவுனியா மக்கள் நன...
பண்டிகை காலத்தை முன்னிட்டு மீண்டும் பயணத்தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் தீவிர ஆலோசனை!
|
|