மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்!
Wednesday, June 19th, 2019ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குலின் பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து தங்கள் பதவிகளை இராஜினாமா செய்த அவர்கள் மீண்டும் அதே அமைச்சுக்களை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் 10 நாட்களில் 1000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்!
கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் - பொதுமக்களிடம...
தீர்மானத்தை தொடர்ந்தும் நிராகரிக்கின்றோம் - ஜெனீவாவில் மீண்டும் அறிவித்தது இலங்கை!
|
|