மிலேனியம் ஒத்துழைப்பு இலங்கைக்கு மீளக் கிடைத்துள்ளது!
Thursday, February 28th, 2019
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையினால், இடைநிறுத்தி வைக்கப்பட்ட வெளிநாட்டு இராணுவ நிதி ஒதுக்கீட்டையும் மிலேனியம் சவால் கூட்டுறவு திட்டத்தையும் அமெரிக்கா மீள அனுமதித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் அமெரிக்க குழுவொன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தக் குழுவுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளில், குறித்த சலுகைகளை இலங்கைக்கு மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மிலேனியம் சவால் திட்டத்தின் ஊடாக, காணி மற்றும் போக்குவரத்து துறைகளின் திட்டங்களுக்காக இலங்கை எதிர்காலத்தில் மானியங்களைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகுகிறார் மலிங்க!
தபால்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை - நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினர் கோரிக்கை!
பிரதமர் தினேஷ் குணவர்தன – ஐ. நா. சனத்தொகை நிதியத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பியோ ஸ்மித் இடையில் சந...
|
|
|


