மின் கட்டண அதிகரிப்புக்கு பல்வேறு தரப்பு அதிருப்தி – நாடுதழுவிய நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றும் எச்சரிப்பு!

Saturday, August 13th, 2022

மின் கட்டணம் 75 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமைக்கு, சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் என்பன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

இது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியதாக, அந்த சங்கங்களின் இணை ஒருங்கிணைப்பாளர் அண்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், தமது சங்கத்திற்கு பதில் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் நாடுதழுவிய நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: