மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

………..
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 44 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
உத்தேச புதிய மின்சாரச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தின் எரிசக்தி மேற்பார்வைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
9 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் - இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை!
பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு அடுத்த வாரம்முதல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் - இராஜாங்க அமைச்சர்...
மாணவர்கள் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உண்டு - ஒழுக்கம் குறித்து அதிபர்களுடன் கலந்துரை...
|
|