பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு அடுத்த வாரம்முதல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன அவிறிப்பு!

Friday, August 6th, 2021

பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்தவாரம் நிர்ணயிக்கப்படும் என கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

முன்பதாக பி.சி.ஆர். சோதனைகள் நடத்தும் 45 வைத்தியசாலைகளும், விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்தும் 43 வைத்தயசாலைகளும் 21 மாவட்டங்களில் நுகர்வோர் விவகார ஆணைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் கொவிட் தொற்று சோதனைகள் வேவ்வெறு விலை விகிதங்களில் முன்னெடுக்கப்படுவது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பாக ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு 5,000 – 9,500 ரூபாவுக்கு இடையிலும், ஆன்டிஜென் சோதனைக்கு 2,000 – 5,900 ரூபா வரையிலும் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். சோதனைகள் நாட்டில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பல்வேறு விலைகளில் நடத்தப்படுவதால், நிலைமையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது. இதன்போதே குறித்த பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: