9 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் – இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை!

Saturday, April 15th, 2017

இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வருடத்தில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் தொலைபேசியின் ஊடாக தமக்கு கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சிறார்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொடுமைகள் குறித்தே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, 190 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பல்வேறு பாலியல் தொல்லைகள் குறித்தும் 347 பாலியல் வல்லுறவு தொடர்பு தொடர்பாகவும் முறைப்பாடு கிடைத்ததாகவும் இலங்கை தேசிய சிறார் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகார சபைக்கு கிடைக்கும் சிலமுறைப்பாடுகள் பிழையான தகவல்களை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முறைப்பாடுகளை உரிய முறையில் விசாரிப்பதற்கு காலம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறார்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, ஏற்படும் பிரச்சனைகள், அல்லது பாலியல் தொல்லைகள் அல்லது சிறார்கள் பராமரிக்க தவறுதல் போன்றவை குறித்த முறைப்பாடுகளை மட்டும் 1929 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடும் படி வேண்டப்படுகின்றனர்.

Related posts: