மின்சார சபைக்கு புதிய ஆண்டு புதிய ஆட்சேர்ப்பு இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Friday, December 30th, 2022

இலங்கை மின்சார சபையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 3.5 முதல் 3.7 பில்லியன் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1,100 ஊழியர்களில் இருவர் 2023 இல் ஓய்வு பெறுவார்கள் என்றும் புதிய ஆட்சேர்ப்பு எதுவும் இடம்பெறாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: