மாலபே தனியார் கல்லூரி விவகாரம்: தடைசெய்யக் கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்கள் தொடர் போராட்டம்!

Monday, January 23rd, 2017

மருத்துவ கல்வியை கேள்விக் குறியாக்கும் மாலபே தனியார் கல்லூரியை தடைசெய்யக் கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்களால் பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏழைகளின் மருத்துவக் கல்வியை கேள்விக் குறியாக்கும் மாலபே தனியார் கல்லூரியை தடைசெய்ய கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்களால் 8 ஆவது நாளாக இன்றும் வகுப்பு மற்றும் வைத்தியசாலை கல்வி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு பகுதி மாணவர்கள் மருத்துவ பீட முன்றலில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வர, ஏனைய மாணவர்கள் பல்வேறு சமூக நிலையங்களில் குறிப்பாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், பொது இடங்கள் குறிப்பாக பேருந்து நிலையங்கள், சந்தை, கடைகள் மற்றும் வைத்தியசாலைகளில் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

unnamed-_57_

Related posts: