மானிப்பாய், காரைநகர், குறிகட்டுவான் வீதிகளின் புனரமைப்பு விரைவில்!

Thursday, May 31st, 2018

யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாமலிருந்த யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதி,  யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி மற்றும் குறிகாட்டுவான் வீதி ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வீதி அபிவிருத்தி அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது குறித்த வீதிகள் புனரமைப்பு செய்யப்படுமா? புனரமைப்பு செய்யப்படுமாயின் எப்போது செய்யப்படும்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி இந்த வீதிகளின் புனரமைப்புக்கான கேள்வி கோரல்கள் செய்யப்பட்டுள்ளன. ஓகஸ்ட் மாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்றார். இந்த மூன்று வீதிகளும் சுமார் 3150 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது எனவும் அந்த அதிகாரி கூறினார்.

Related posts: