ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்வு!
Tuesday, March 6th, 2018அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்படவுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி என திகதியிடப்பட்டு இந்த சுற்று நிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெற்றுக் கொள்ளும் வயதெல்லை 60 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எனினும் புதிய சுற்று நிருபத்தின் அடிப்படையில் அரசாங்க சேவையில் நீடித்திருக்கக்கூடிய உச்சபட்ச வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அந்தமான் அருகே காற்றழுத்தம்: இது புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!
கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது - காரணம் என்ன?
சாதகமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை - அனுரகுமார திசாநாயக்கவினால் பொருளாதார அப...
|
|