பாடசாலையைத் திறப்பேனே தவிர சிறைச்சாலையைத் திறக்கமாட்டேன் – ஜனாதிபதி!
Thursday, March 2nd, 2017
சிறைச்சாலைகளை மூடிவிட்டு, பாடசாலைகளைத் திறக்கின்ற ஒரு நாடே எமது தேவையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கேகாலை புனித மரியாள் பாடசாலையில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இலங்கையிலேயே சொகுசான வசதி வாய்ப்புக்கள் உள்ள சிறைச்சாலையொன்று ஹம்பாந்தோட்டையில் அடுத்த வாரமளவில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், அதில் பிரதம அதிதியாக தன்னைக் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தனர். நான் அந்த அழைப்பை நிராகரித்தேன். சிறைச்சாலை திறப்பதற்கு நான் ஒருபோதும் கலந்துகொள்ள மாட்டேன் எனக் கூறிவிட்டேன்.
பாடசாலையொன்றை திறப்பதாக இருந்தால், அதில் நான் விருப்பத்துடன் கலந்துகொள்வேன். சிறைச்சாலை திறக்கும் நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள முடியாது என எனக்கு அழைப்பு விடுத்தவர்களிடம் நான் கூறினேன் எனவும் ஜனாதிபதி இங்கு ஆற்றிய உரையின்போது மேலும் கூறினார்.
Related posts:
|
|