மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது!
Friday, October 20th, 2023யாழ்ப்பாணத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவரை நேற்று யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நீராவியடி, கந்தர்மடம், நல்லூர், இலுப்பையடி சந்திக்கு இடைப்பட்ட பகுதிகள், கலட்டி போன்ற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்களை ஏமாற்றியே இந்தச் சம்பவம் இடம்பெற்று வந்துள்ளது.
கொக்குவில் மற்றும் நல்லூர் வீரகாளி அம்மன் கோவிலடியை சேர்ந்தவர்களே இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர்கள் தனியே உள்ள நபர்களை குறிவைத்து, பொலிஸ் என்றும் கூறி பணத்தை பறிமுதல் செய்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பரந்தனில் வாகன விபத்து ; இளைஞன் ஒருவர் பரிதாப பலி!
இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரத்து 477 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் - கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்ப...
வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!
|
|