விடுமுறைகள்  இரத்து!

Thursday, September 14th, 2017

அனைத்து மின்சார சபையின்  ஊழியர்களுக்குமாக எதிர்வரும் 20  ஆம் திகதிவரை  விடுமுறைகள்  இரத்துச்  செய்யப்பட்டுள்ள தாகமின்சார சபை அறிவித்துள்ளது.

பிர­தான மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் நேற்று நண்பகல் 12 மணி முதல் 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகஇலங்கை மின்­சார சேவை சங்­கத்தின் செய­லாளர் ரஞ்சன் ஜயலால்தெரி­வித்திருந்தார்.

இதேவேளை,  பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் 48 மணி நேரத்துக்குள் தமதுகோரிக்கைக்கு அரசாங்கம் முறையான தீர்வொன்றை பெற்றுத்தராவிட்டால் எதிர்வரும் 15ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்துக்குசெல்வோம் என அவர் மேலும் கருத்துதெரிவித்துள்ளார்

இந்நிலையிலேயே  எதிர்வரும் 20 ஆம் திகதிவரை  மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: