மாணவர்களுக்காக 50 ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, June 15th, 2022

கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வெளிபிரதேச வீதிகளையும் உள்ளடக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான 20 ‘சிசு செரிய’ பஸ் சேவைகளை இன்றுமுதல் நடைமுறைப்படுத்ப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

20 பேருந்து சேவைகளுடன் ஆரம்பமாகும் மாணவர்களுக்கான இந்த புதிய பேருந்து போக்குவரத்து சேவையில் பேருந்துகளின் எண்ணிக்கையை ஒரு மாத காலத்திற்குள் ஐம்பதாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு, பொது போக்குவரத்து சேவைகளின் கட்டண உயர்வு ஆகியவற்றை கருத்திற் கொண்டே மேற்படி புதிய பேருந்து சேவைகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்த்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: