வெப்பநிலை அதிகரிக்கும் – தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிருங்கள் – அதிக நீரை பருகுமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்து!
Thursday, April 20th, 2023தெற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
எட்டு வருடங்களில் இரட்டிப்பாக அதிகரித்த வாகனங்களின் எண்ணிக்கை - அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!
இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு - நிதி அமைச்சு!
புரிந்துணர்வுகள் மூலமாக முன்னோக்கிச் செல்வோம் - யாழ். பல்கலையில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ர...
|
|