உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்!

Wednesday, December 6th, 2017

248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னராக கடந்த நவம்பர் 27ஆம் திகதி 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. இதற்கமைய இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் கையேற்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் டிசெம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக அறிவிக்கப்பட்ட 248 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் டிசெம்பர் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். ஆயினும் எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளிலேயே தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டின் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை!
யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட...
தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை - அரசியல...