மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021

பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இத்தகைய பாடசாலைகள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த இத்திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வியை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 % இருந்து 60 % உயர்த்தவும் கலைத் துறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாகக் குறைக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் கபில பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பம் - ஜனாதிபத...
சினோபெக் வருகையின் பின்னர் இலங்கையின் எரிபொருள் விலையில் மாற்றம் - நிலையான விலையை அறிமுகப்படுத்த அரச...
பிரதமர் தினேஷ் குணவர்தன - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சந்திப்பு – இலங்கைக்கான ந...

கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் – இலங்கையின் அரச தலைவர்...
சமவங்களுக்கு வருத்தம் தெவித்து ஈபிடிபியுடன் முதல்வர் மணிவண்ணன் சமரசம் - ஜப்பன் அரசு வழங்கிய நிதியை ம...
ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - நாடாளுமன...