மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முற்படுவோரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
Saturday, August 14th, 2021பல்வேறு வழிகளை பயன்படுத்தி மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முற்படுவோரை தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், தடைகளை பொருட்படுத்தாமல் மாகாணங்கள் முழுவதும் பயணம் செய்ய முயற்சிக்கின்றனர் .
இது தொடர்பிலான நடைமுறை முடிவுகளை அரசாங்கம் மற்றும் கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயலணி மேற்கொள்ள வேண்டும்.
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு குத்தகைக் கொடுப்பனவுகளுக்கு நிவாரணம் வழங்குவது, கடன் தவணைகளுக்கான வட்டியை குறைத்தல் மற்றும் அதனை டிசம்பர் வரை நீக்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|