இலங்கைக்கு ஆபத்து – பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கை!

Tuesday, June 14th, 2016

இலங்கைக்கு கீழாக ஏற்பட்டு வரும் நிலநடுக்க வழி ஒன்றினால், இலங்கையில நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து உருவாகிவருவதாகபேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

இலங்கைக்கு கீழாக 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்க வழி ஒன்று உருவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மலையகப் பகுதிகளில் பாறைகளின் மீது படிந்துள்ள மண், நிலையிழக்கும் என்றும், இதனால் பெரியளவில் நிலச்சரிவுகள் ஏற்படவாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

வவுனியா பல்கலைக்கழகம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பை வழங்கும் - பீடாதிபதி மங்களேஸ்வ...
ஒரு பில்லியன் டொலரை எட்டும் இலக்குடன் இலங்கை - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை!
இலங்கையில் உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இலங்கையின் அரச தலைவர்களால...