மழையால் அவதியுறும் எமக்கு கூரைத்தகடுகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் பூம்புகார் பகுதி மக்கள் கோரிக்கை!
Thursday, November 17th, 2016தொடரும் மழை காரணமாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவரும் எமது பகுதியிலுள்ள குடிமனைகளுக்கு தற்காலிக தீர்வாக கூரைத்தகடுகளை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை பூம்புகார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றையதினம் குறித்த பகுதி மக்களது நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்களது நிலைமைகளையும் கோரிக்கையையும் கேட்டறிந்துகொண்ட இரவிந்திரதாசன் அவற்றை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது பார்வைக்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக துள்ளார்.
Related posts:
கொரோனா விதிமுறைகளை மீறினர் - திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் பொருளாதார ஸ்திரத்தன்மை குறி...
உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்- - யாழ். ...
|
|