சுயநலன்களுக்காக மக்களை ஏமாற்றுவதற்கு நாம் தயாரில்லை – யாழ் .மாநகர சபையின் பாதீட்டை தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் றெமீடியஸ்!

Wednesday, December 2nd, 2020

மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஆட்சி செய்ய வேண்டிய ஒரு சபையை தனிப்பட்டவர்களின் சுயநலன்களுக்காக நின்று மக்களை ஏமாற்றுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரின் உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரின் பாதிடு தோற்கடிக்கப்பபட்டமை தொடர்பில் இன்றையதினம் ஊடகளுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

மக்கள் நலன் மிக்க பாதீடு என சொல்லி தமது சுயநலன்களை முன்னிறுத்தி இவ்வருடமும் மக்களை ஏமாற்றும்  நடவடிக்கைகளில் யாழ் மாநகரின் ஆட்சியாளர்கள் முற்படுவதனால் மக்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான யாழ் மாநகரின் பாதீட்டை நாம் எதிர்த்து வாக்களித்து தோற்கடித்துள்ளோம்

2018 ஆம் ஆண்டு  இச்சபையை பொறுப்பேற்ற தமிழரசு கட்சியின் சார்பிலான ஆட்சியாளர்கள் மாநகரை கட்டியெழுப்புவோம் என கூறி மக்கள் நலனற்ற வகையிலான பாதிட்டையே முன்மொழிந்து சட்டத்திலுள்ள அதிகாரத்தை கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளும் நிறைவேற்றிவந்தனர்.  அதே போன்றதொரு பாதீட்டையே இம்முறையும் முன்வைத்துள்ளனர்.

அத்துடன் கற்பனையிலான வரிபை நம்பி அதனூடாக வருமானம் வரும் என முன்மொழிந்து அதற்கு அங்கிகாரம் கோருவதென்பது ஏற்க முடியாததொன்றாகும். ஆனால் அதையே யாழ் மாநகரின் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் செய்ய முற்படுகின்றனர். வருமானத்திற்குரிய வழிமுறைகளை தேடிக்கண்டுபிடிக்காமல் வரிகளை அதிகரித்து மக்கள் மீது அதை திணிக்க முற்படுகின்றனர். அத்துடன் தமது பதவிகளையும் தக்கவைக்க இந்த பாதீட்டை பகடைக்காயாக பாவிக்க முற்படுகின்றனர்.

தத்தமது ஆடம்பர செலவீனங்களையும் அதிகரித்துள்ள ஆட்சியாளர்கள் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு இன்னும் பல கற்பனையான முன்மொழிவுகளை காட்டி சபையின் அங்கீகரத்தை கோரிகின்றனர்.

இதை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.  நாம் மக்களின் நலன்களை முன்னிறுத்தியே அரசியற் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றோம். எமது கட்சியின் கொள்கை வழிமுறை அதுவே.

அந்தவகையில் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி செய்ய முன்வந்தவர்களுக்கு நாம் 2018 ஆம் ஆண்டு ஆதரவு வழங்கியிருந்தாலும் அவர்களது ஆட்சியை அவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன்சாரா திட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாரில்லை. அந்தவகையில் இந்த பாதீட்டை நாம் எதிர்த்தோம். அதனால் அது தோற்கடிக்கப்பட்டது என்றார்.

Related posts: