மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது – கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி வலியுறுத்து!
Wednesday, September 8th, 2021
அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளின் மூலம் கொரோனா திரிபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே வலியுறுத்தினார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அரசியல் பேதங்களை மறந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்
Related posts:
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பம்!
ரஷ்ய வழங்கிய கடனை எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த இலங்கை நடவட...
நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்!
|
|