மரநடுகை தொடர்பில் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பு!
Wednesday, February 3rd, 2021எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டில் அமையும் சுபவேளையில் இருந்து மரக்கன்று ஒன்றை நாட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் அதிகளவான மரக் கன்றுகளை நாட்டில் நாட்டுவதற்கான சூழல் உருவாகும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
டுதமிழ், சிங்கள புத்தாண்டில் உதயமாகும் சுபவேளை தொடர்பில் மக்கள் கூடிய கவனம் எடுப்பர். அதன் காரணமாகவே மரக்கன்று ஒன்றை நடுவதற்கு ஊக்குவிக்கின்றோம்.
இந்த யோசனையை செயற்படுத்தினால் எம்மால் முன்னோக்கி பயணிக்க முடியும்.டு எனவும் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது!
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு – பொலிஸ் ஊடகப...
சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!
|
|