மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை – உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!
Tuesday, April 4th, 2023மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்புவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்படி உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை அறிவித்த சபாநாயகர் மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தை சாதாரணப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் எனவும் குறிப்பிட்டார்.
Related posts:
விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
இன்று இரவு 10 மணிமுதல் 6 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நாடுமுழுவதும் நடைமுறைக்கு வருகின்றது ஊரடங்கு - ...
தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே பேச்சுக்களை அரசு முன்னெடுகின்றின்றது - இந்தியாவின் ...
|
|