மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் சிக்கலில்!
Saturday, January 21st, 2017பேராதனை பல்கலைக்கழகத்தில் உதவி வைத்திய சேவை பிரிவு மாணவர்களுக்கு கண்டி அல்லது பேராதனை வைத்தியசாலைகளில் மருத்துவ பயிற்சிகள் வழங்கப்படாமையினால் அந்த மாணவ மாணவிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக உதவி வைத்திய சேவை கூட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவ பயிற்சிக்காக மாணவர்களுக்கு தேவையற்ற பணச் செலவு மற்றும் காலச் செலவு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் தர்மகீர்த்தி ஏபா கூறினார். மாணவர்கள் தற்போது மருத்துவ பயிற்சிக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாக கூறும் தர்மகீர்த்தி ஏபா, அந்தப் பயிற்சிக்காக வரையறுக்கப்பட்ட சில குழுவினருக்கே சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பில் சரியான தீர்வொன்று வழங்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
மறு அறிவித்தல்வரை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம் - தொடருந்...
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்பம் தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்தவாரம்!
பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
|
|