உத்தேச தேர்தல்கள் சட்டமூலத்தின் மூலம் அபராதங்கள் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பு!

Saturday, September 16th, 2023

உத்தேச தேர்தல்கள் சட்டமூலத்தின் மூலம் தற்போதைய தேர்தல் சட்டங்களால் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகைகள் போதுமானதாக இல்லாததால், தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அபராதங்கள் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்கள் சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்டம் சட்டமூலம் ஆகியவை நாடாளுமன்றத்தில் நீதி மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகம் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் மேற்படி சட்டமூலங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் சட்டமூலத்தின் மூலம், 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு அமைய, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் தேர்தல் மனு தாக்கல் செய்வதற்கான நேரத்தை 42 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் அல்லது வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும், தவறினால் தேர்தல் மனு தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக புதிய திருத்தத்தின் மூலம் கால அவகாசம் 42 நாட்களாக மாற்றியமைக்கப்படும் எனவும் மேலும், இந்த சட்டமூலம் தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அபராதத் தொகையை திருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சிவில் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 205 இன் படி, தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குதல் மற்றும் நடவடிக்கைகளின் தீர்ப்பு தொடர்பாக திருத்தங்கள் குறித்த குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தீர்ப்பின் ஒரு சான்றளிக்கப்பட்ட நகல் அல்லது தீர்ப்பின் அறிக்கையை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கட்டணத்தைச் செலுத்துவது தொடர்பான நகல்களைப் பெறுவதற்கான திருத்தங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: