எதிர்வரும் திங்களன்று ஐ.நா. அமர்வு அரம்பம் – ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளைமறுதினம் ஜெனிவா பயணம்!
Wednesday, February 23rd, 2022ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கள்கிழமை ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை குறித்த அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
குறித்த அறிக்கை ஏற்கனவே, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை அதற்கான பதிலளித்து உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்!
முடிவுக்கு வந்தது யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நிர்வாக முடக்கல் போராட்டம்
வெங்காயப் பூவுக்கு கிராக்கி கிலோ 200 ரூபாவாக விற்பனை!
|
|