மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதியமைச்சின் முழுமையான அனுமதியை வழங்க தீர்மானம் – அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

Thursday, March 2nd, 2023

மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கடன் கேள்விப்பத்திரம் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு வேலைநிறுத்தங்களால் தடை ஏற்படுமானால், தனியார் துறை வங்கிகளில் வைப்புக்கணக்கை ஆரம்பிப்பதற்காக அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்று மாலை நடைபெற்றுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

அந்தவகையில் நிதி அமைச்சின் முழுமையான அனுமதியின் கீழ், மேற்படி வைப்புக் கணக்கை தனியார் வங்கிகளில் ஆரம்பிப்பதற்கு இடமளிப்பது தொடர்பில் அங்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.  வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அரச வங்கிகளூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளமுடியாமற் போனால், கடன் பத்திரம் விநியோகித்தல் உள்ளிட்ட நிதி விடயங்கள் அனைத்தும் சீர்குலைவதற்கு சந்தர்ப்பம் உள்ளமை தொடர்பில் இந்த விசேட அமைச்சரவைக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அரச வங்கிகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கேள்விப்பத்திரம் திறக்க முடியாத நிலை ஏற்படலாம்.

இந்நிலையில், நிதியமைச்சின் அனுமதியுடன் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு

இந்த முறைமையில் தனியார் வங்கிகளில் வைப்புக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பந்துலகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுங்கள் - மக்களுக்கு சுகாதார தரப...
தனியார் பேருந்தை முந்திச்செல்லும் போட்டி - தரிப்பிடத்தில் நின்ற பயணிகளை ஏற்றாது வேகமாக சென்ற இ.போ.ச...
பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர்கள்...