மக்கள் எதிர்பார்க்கும் தலைவரை மகிந்த வேட்பாளராக நிறுத்துவார் – நாமல் ராஜபக்ச!

Sunday, July 7th, 2019

மக்கள் எதிர்பார்க்கும் தலைவரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அக்குரெஸ்ஸ தொகுதியின் அதிகாரசபை கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் எதிர்பார்க்கும் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கை இணைக்க கூடிய தலைவர் ஒருவரை கட்சியின் வேட்பாளராக அடுத்த மாதம் 11ஆம் திகதி அறிவிப்போம்.

முடங்கி போன நிலமாக மாற்றப்பட்டுள்ள தாய் நாட்டை மீண்டும் தொழில் பூமியாக மாற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


கொரோனா தொற்றின் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு கடைகளில் குவியும் மக்கள்!
நிறைவுக்கு வந்தது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாச...
சிறப்புற நடைபெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!