இன்றும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Tuesday, December 14th, 2021நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்படி பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
வெளிமாவட்ட தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளின் பணிப் புறக்கணிப்பு: பயணிகள் அவதி!
ஆளுநர் தலைமையில் நடைபெற்ற வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல்!
அரச சேவையை வினைத்திறனாகவும் பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்வதற்கும் உப ...
|
|