ரயிலில் பாய்ந்து ஒருவர் சாவு!

Monday, October 16th, 2017

 

யாழிலிருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த ரயிலில் நடந்த மோதல் சம்பவமொன்றில் ஒருவர்கொல்லப்பட்டுள்ளார்.

மேற்படி பயணம் செய்த ரயிலில் இருவருக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்தர்ப்பத்தின் போது ஒருவர் மற்றைய நபரை ஓடிக்கொண்டிருந்த ரயிலிலிருந்து தள்ளிவிட்டுள்ளார்.இவ்வாறு தள்ளிவிடப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ராகம ரயில் நிலையத்திற்கும் ஹொரப்பே ரயில் நிலையத்திற்கும் இடையே இச் சம்பவம்இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிப் பயணித்த ரயிலில் இந்தச் சம்பவம்இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் அடையாளம் காணப்படவில்லை எனவும்இ சுமார் 45 முதல் 50 வயதுமதிக்கத் தக்கவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம்கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரை ரயிலிலிருந்துதள்ளிவிட்ட நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts: