மக்களின் மீது இனி நேரடி வரி – நிதியமைச்சர்!
Monday, June 26th, 2017
மக்களின் மீது நேரடி வரியை சுமத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்து உபபீடாதிபரியை நேற்று முன்தினம் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
தற்போதைய அரசு ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது 17 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. இந்தத் தீர்மானத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது அதிகமான விடயங்களில் மக்கள் மீது மறைமுக வரியே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்தமுறை இனி வரம் காலங்களில் நேரடி வரிமுறை என்ற வகையில் அறிமுகம் செய்யப்படும் என்றார்.
Related posts:
வடக்கு மாகாணக் கல்வியமைச்சு மிக முறைகேடான வழிமுறைகளில் நியமனங்களை வழங்கி வருகின்றது - இலங்கை ஆசிரிய...
இலங்கையில் 7 நட்சத்திர சொகுசு கட்டிடத் தொகுதி!
கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் வீடுகளைக் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன...
|
|