மக்களின் தேவைகளை அறிந்து செயல் வடிவம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா – பிரபல சட்டத்தரணி றெமிடீயஸ்  !

Saturday, January 27th, 2018

மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு அவற்றுக்கு முழு வடிவம் கொடுத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என பிரபல சட்டத்தரணி றெமிடீயஸ்  சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநகர்ப் பகுதியில்; ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பரப்பரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

உள்ளுராட்சி தேர்தல் என்பது அந்தந்த பகுதிகளில் அபிவிருத்திகளை இனங்கண்டு மக்களின் ஆதரவுடன் அவற்றுக்கான தீர்வுகளை காணும் ஒரு தேர்தலாகவே உள்ளது. அந்த வகையில் ஒரு பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு அந்த தேவைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது மட்டுமன்றி மக்களின் தேவைக்கும் சிந்தனைக்கும் செயல் வடிவம் கொடுக்கும் ஒரு கரும வீரனாக டக்ளஸ் தேவானந்தா மட்டுமே திகழ்ந்து வருகின்றார்.

டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மக்களின் நலன்களுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் எப்போதும் அர்ப்ணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில்தான் இந்தப் பகுதி மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் இணங்கண்டு அவற்றுக்கு தீர்வு காண்பதில் கட்சித் தலைமையும் கட்சியும் கடந்த காலங்களில் எப்படி செயற்பட்டு வந்ததோ அது போன்றுதான் எதிர்காலங்களிலும் உறுதிப்பாட்டுடன் செயற்படும் என்ற நம்பிக்கை எமது மக்களுக்கு இருக்க வேண்டும்.

இங்குள்ள மக்களின் பெரும்பாலனவர்கள் யாழ்.மாநகர சபையில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதும் அவர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்ந்தம் தனத பங்களிப்பினை வழங்கும்.

கடந்த காலங்களில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் கொள்கைக்கு அமைவாக அரசுடன் ஒரு இணக்க அரசியலை முன்னெடுத்து யாழ்.மாவட்டம் மட்டுமல்லாது வட பகுதியில் ஒவ்வொரு பகுதிகளிலும் வாழும் மக்களினது மேம்பாட்டுக்காக உழைத்துள்ளார். என்பதுடன் இனிவரும் காலங்களிலம் அப்பணிகளை தொடர்வதற்கும் தயாராக இருக்கின்றார்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் சரி யுத்தம் நிறைவுபெற்ற காலப்பகுதியிலும் சரி எமத மக்கள் இடர்பட்டு துயர் சுமந்த நேரங்களிலெல்லாம் தனி ஒருவராக நின்று மக்களுக்கான பணிகளை சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம்  கொடுத்து செயலாற்றி வந்த செயல் வீரரனாக திகழ்கின்றார்.

எப்போதுமே எளிமையான அவரது அரசியல் பயணம் அவரை எமது மக்களின் மனங்களில் நீங்காத ஒரு இடத்ததை தக்க வைத்துக் கொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே அவரது சிறந்த அரசியல் தலைமையை நாம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் எமது பகுதிகளையம் அபிவிருத்தியால் கட்டியெழுப்ப முடியம் என்ற நம்பிக்கையுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதி செய்யமக்கள் எல்லோரும் ஒருமித்த ஆதரவையும் ஒத்துழைப்பையம் வழங்கி அவரத கட்சியின் வெற்றிக்கு உருதுணை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமே சட்டத்தரணி றெமீடியஸ் மேலும் சுட்டிக்காட்டினார்

இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா இப்பகுதியில் வாழும் மக்களின் எப்போதும் நிலையான நிம்மதியான  வாழ்வுக்காகவும் உழைப்போம் என்றும் தெரிவித்தார். அத்துடன் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுப்போம். எமது மக்களின் வளமான வாழ்வுக்காக நிச்சயம் நாம் என்றும் பங்காற்றுவோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts: